மேஷம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு செய்யும் சூழ்நிலை உண்டு. மறதி அதிகரிக்கும். தொட்ட காரியங்களில் தாமதங்கள் ஏற்படும்.
ரிஷபம்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். அலங்காரப் பொருட்களை வாங்கிச்சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
மிதுனம்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். வழக்குகள் சாதகமாகும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரலாம்.
கடகம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எந்தக்காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
சிம்மம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறலாம். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலை விரிவு செய்ய வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்
தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்
அவசரமாக எடுத்த முடிவிலும் ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் தொடரும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
தனுசு
வாய்த்த நண்பர்களால் வருமானம் கூடும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வந்த கருத்து வேறுபாடு அகலும். ஆடை , ஆபரணச் சேர்க்கை உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
மகரம்
திட்டமிட்ட காரியத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாள். தெரியாததைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.
கும்பம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வருமானத்தைப் பெருக்கும் வழியைக் கண்டு கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.
மீனம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நேசித்தவர்களோடு ஏற்பட்ட பகை மாறும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகம் கிடைப்பது பற்றிய நல்ல தகவல் வரலாம்.