‘சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ் விடத்திலும் எம் மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்த தில்லை’, என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இறப்பர் – அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியா கின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ யின் பங் கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ ஆகியோர் இதன்போது இலகுரக படகு முற்றத்தின் முன்னால் அமைக்கப்பட் டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைத்தனர்.
நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போது தெரிவித்ததாவது| ‘நமக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த உறவு நீண்ட வரலாறு கொண்டது. உலகம் முழுவதும் வர்த்தகம் ஆரம்பிக் கப்பட்ட காலத்திலேயே சீன அரசாங்கம் இலங்கைக்கு வந்து வர்த்தகம் செய்ததாக சாட்சிகள் உள்ளன.
சீனா நமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்பு கள் நேர்ந்ததில்லை. அதனால் நமது நாடு கள் எப்போதுமே மிகவும் சாதகமான கொடுக்கல் – வாங்கல்களை செய்து கொண்டிருக்கின்றன. அன்று ஏற்படுத் தப்பட்ட இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தை நம்மவர்கள் இன்னும் நினைவில் வைத்தி ருக்கிறார்கள். ‘எமது இறப்பர் உங்களிட மிருந்து அரிசி’. அதேபோன்று இலங்கை யில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் சௌசன்லாய் இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி மிகவும் மதிப்பு மிக்க செய்தியை அனுப்பினார்.’ என்றார