தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண் வீரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியிலிருந்து தேசிய கராத்தே அணிக்கு தெரிவு செய்யப்பட்ட வீரர், வீராங்கனையை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் வீரர் மற்றும் வீராங்கனைகளே இவ்வாறு தேசிய கராத்தே அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் பிரதான போதனாசிரியர் பொறியியலாளர் சிகான் முருகேந்திரன் வழிகாட்டலில் போதனாசிரியர் எச்.ஆர்.சில்வாவின் பயிற்றுவிப்பு ஊடாக ஆர்.துஸ்யந்தன் என்னும் வீரரும் வி.விதுஜா என்னும் வீராங்கனையும் இவ்வாறு தேசிய கராத்தே அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண்ணொருவர் தேசிய கராத்தே அணிக்கு மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 21 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் முதன் முறையாக மட்டக்களப்பிலிருந்து ஆண் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் விளையாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் போதனாசிரியர் எச்.ஆர்.சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட வீரரும் வீராங்கனையும் இதன்போது மாநகரசபை முதல்வர்,பிரதி முதல்வரினால் கௌரவிக்கப்பட்டனர்.