யாழ்.வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி தாளையடி பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடியாகவே காணி உரிமையாளரால் பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை, ராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று அந்தப் பகுதியில் அகழ்வு பணியில் ஈடுபட்டு பெருமளவு அபாயகரமான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெடி பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு அதிரடிப்படையினர்
பொலிஸார் ஊடாக மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.