சிறைச்சாலைகள் முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் செயற்பாட்டினால், தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தொிவித்து தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப்பேர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சட்டத்தரணி மொஹான் பாலேந்திரன் ஊடாக தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகிய இருவரும் முன்னிலையாவா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.