ஐக்கிய தேசியக் கட்சி தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18 ஆம்திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
கடந்த 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆசனம் எதனை பெற்றிருக்கவில்லை.
எனினும், கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சிக்கு தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைத்திருந்த நிலையில் சுமார் 10 மாதங்களின் பின்னர் கட்சித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிட்ட ஆவணத்தை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இன்று முற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளித்தார்.
கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு, நாடுமுழுதுவம் 249,435 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
எந்தவொரு மாவட்டத்திலும் ஆசனம் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமை கிடைத்தது.
இந்நிலையில், 9 மாதங்களுக்கு மேலாக தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கு நபர் ஒருவர் பெயரிடப்பாடதிருந்த நிலையில், கட்சித் தலைவர் ரணி ல் விக்ரமசிங்கவை பெயரிட, கடந்த மாதம் செயற்குழு தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.