யாழ்.உடுவில் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டு கதவை கழற்றிவிட்டு உட்புகுந்து மோட்டார் திருடிய இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் யாழ்.ஓட்டுமடத்தை சேர்ந்தவர்களே இன்று நண்பகல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இருவரும் மோட்டார் திருடிக் கொண்டு தப்பித்த வேளை வீட்டிலிருந்த பெண் கண்டுள்ளார். இதனையடுத்து அவர் கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து கூடிய அயலவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து நையப்புடைத்தனர். சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.