புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று, செயல்படுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய அரசுக்கு, கீச்சக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் புதிய விதிகளை மத்திய அரசு, கடந்த பெப்ரவரி மாதம், அறிமுகப்படுத்தியது.
இந்தப் புதிய விதிகள், கடந்த மாதம், நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதற்கு கூகுள் போன்ற நிறுவனங்கள் இணங்கியுள்ளன. ஆனால், கீச்சக நிறுவனம் மட்டும் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்த நிலையில், ‘புதிய விதிகளை ஏற்காவிட்டால், கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என,கீச்சக நிறுவனத்தை, மத்திய அரசு எச்சரித்தது.
இந்த நிலையில், மத்திய அரசுக்கு, கீச்சக நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், விதிகளை ஏற்று, செயல்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இன்னும், ஒருவாரத்தில் இது தொடர்பான உறுதியான விபரங்களை தெரிவிக்கிறோம்’ என்று கூறியுள்ளது.