ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசு மற்றும் தனியார் வங்கிகள் இன்று (10) மற்றும் நாளை (11) திறந்திருக்கும் என பொருளாதார புத்துணர்ச்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜூன் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வூதியத்தை பெற வரும் மக்கள் தங்கள் ஓய்வூதிய அடையாள அட்டைகளை அனுமதி அட்டைகளாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஓய்வூதியதாரர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.