வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்களை அனுப்புவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அறிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 500 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, நாசாவின் பேச்சாளர் பில் நெல்சன் தெரிவித்துள்ளார். “30 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்படாத வெள்ளி கிரகத்தை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த திட்டங்கள் அமைந்துள்ளன.
இவ்விரு திட்டங்களும் வெள்ளி எவ்வாறு நரகத்தைப் போன்றதொரு உலகம் ஆனது, மேற்பரப்பில் ஈயம் உருகும் திறன் வந்தது எப்படி என்பதை ஆராய்வதுடன், இந்த கிரகத்தின் காற்று மண்டலம், பூகோளம் சார்ந்த அம்சங்களும் ஆராயப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.
நாசாவின் வெள்ளி கிரக ஆய்வுப் பயணங்கள் 2028 ஆம் ஆண்டுக்கும் 2030 ஆம் ஆண்டுக்கும் இடையே நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.