தற்போது ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படுகின்ற 5000 பணத்தொகையினை பெற தகுதியுடையோர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த பணத்தொகை எதிர்வரும் ஜுன் மாதம் 02 திகதி முதல் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்வுள்ளது.
- .நிரந்தர வருமானம் பெறும் அரசஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தகுதியுடையவர்கள்.
- சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.
- சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காதவர்கள் (Waiting List)
- முதியோர்கள் (70 வயதினை உடையவர்கள்)
- 70 வயதினை பூர்த்தியடைந்தும் இதுவரை முதியோர் கொடுப்பனவிற்கான முத்திரையினை பெறாதவர்கள். ( Waiting List )
- ஊனமுற்றவர்கள் ( Disables )
- ஊனமுற்றவராயினும் இதுவரை கொடுப்பனவினை பெறாதவர்கள். ( Waiting List )
- PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்களும் ( Waiting List )
- பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளானோர்கள்.
மேலும், ஒரு நபர் சமுர்த்தி பெறுகின்றவர் அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர் அத்துடன் அந் நபர் முதியோர் கொடுப்பனவினை பெறுகின்றவராயினும் அல்லது பெற தகுதியுடையவராயினும் அவர் 2 பெறுவனவினையும் பெறுவதற்கு தகுதி உடையவராவார். அதாவது, 5000 + 5000 = 10,000/=
இதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காக செயற்பட்டுக்கொண்டீருக்கின்றது. எனவே, இதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களை சந்தித்து இக்கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளுங்கள். நிவாரண நிதி கிடைக்காதவர்கள் இந்த 011 4354550 தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொண்டு தங்கள் முறைபாடுகளை மேற்கொள்ள முடியும்.