நோர்வூட் தியசிரிகம பகுதியில் பால் ஏற்றி வந்த பவுசரும், கெப் ரக வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (28) பிற்பகல் 2. 30 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ் விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கெப் ரக வாகனத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.