Tuesday, March 28, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

வீடுகளில் நினைவேந்தலை முன்னெடுக்குமாறு யாழ்.பல்கலை மாணவர்கள் கோரிக்கை

News Team by News Team
May 18, 2021
in இலங்கை
0 0
0
படையினர், பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் யாழ்.பல்கலைக்கழகம்
0
SHARES
81
VIEWS
FacebookWhatsappTwitterEmail

எமது அன்பார்ந்த தமிழ் மக்களே! கோவிட்டை காரணம் காட்டி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முடக்கப்பட்டிருப்பதால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம். எமது வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

“இன்று மே 18. தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளாகும். தமிழ் மக்களைக் கொடூரமாக அழித்ததோடல்லாமல் நமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவுகூரலை நாங்கள் எதிர்கொள்கின்றோம்.

எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீள அமைக்க வழிவிட்டது.

இப்போது வருடாவருடம் எமது மக்கள் பொங்கும் உணர்வுகளோடு முள்ளிவாய்க்கால் வந்து அழுது ஆறிச்செல்லும் நினைவுச்சுடர் தூபியை அரசு மிலேச்சத்தனமாக அழித்ததோடு நினைவுகளையும் வஞ்சகமாகக் கவர்ந்து சென்றுள்ளது.

மேலும், கோவிட்டை காரணம் காட்டி முல்லைத்தீவு பகுதியை முடக்கி நாம் எந்தவிதத்திலும் முள்ளிவாய்க்காலை அணுக முடியாதபடி அரச தரப்பினரும் அதன் படையினரும் தடுத்துள்ளனர். இவர்களது இழி செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்.

ஆகவே, எமது அன்பார்ந்த தமிழ் மக்களே! இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முடக்கப்பட்டிருப்பதால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக் கொண்டபடி இன்று மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம். எமது வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம்.

இல்லங்களில் ஒரு வேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தயாரித்து உண்போம். அந்தவேளையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு இனப் படுகொலையின் உண்மையை எடுத்து விளக்குவோம்.

நினைவிடத்தை அழிக்கலாம்; நினைவுகளை அழிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்வோம்” என்றுள்ளது.

Tags: நினைவேந்தல் கோரிக்கைபல்கலைக்கழக மாணவர்கள்
News Team

News Team

Recent Posts

  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்
  • தேர்தல் ஆணைக்குழு அடுத்த மாதம் மீண்டும் கூடுகிறது
  • லங்கா சதொச ஊழியர்களுக்கு 7 கோடி போனஸ்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist