Sunday, March 26, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

சோரம் போகா இனமாக சேர்ந்தெழுவோம்; மாமனிதர் ரவிராஜின் பாரியார் அறைகூவல்

News Team by News Team
May 18, 2021
in இலங்கை
0 0
0
சோரம் போகா இனமாக சேர்ந்தெழுவோம்; மாமனிதர் ரவிராஜின் பாரியார் அறைகூவல்
0
SHARES
126
VIEWS
FacebookWhatsappTwitterEmail

சோகங்களே சொத்தாகிப் போனாலும், சோரம் போகா இனமாக சேர்ந்தெழுவோம் என்று மாமனிதர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் அறைகூவல் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முள்ளிவாய்க்காலில் உறவுகளின் உயிர்களை அள்ளிக் கொடுத்த அவலம் நிகழ்ந்து மற்றொரு ஆண்டு, உருண்டோடி விட்ட போதிலும் மாறாத சோகம் திரண்டெழுந்து எம் மனதைக் கலங்க வைக்கிறது.

அச்சத்தின் உச்சத்தில் நின்றவாறு எமது உறவுகள் மரணத்தை எதிர்கொண்டு தழுவிய குரூரம் மனது மறக்கக் கூடியதா? குடும்பத் தலைவனை இழந்த சோகத்தால், குமுறும் மனதோடு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை பொறுமையோடும் பொறுப்புணர்வோடும் ஏற்று வாழும் மகளிர் எத்தனை பேர், எம் மத்தியில்?

பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தி, எம் நேசக்கரங்களை உதவும் கரங்களாக அவர்களை நோக்கி நீட்டுவதே முள்ளிவாய்க்காலில் மறைந்த எம் உறவுகளுக்கு நாம் செய்யும் உண்மையான நினைவேந்தலாகும்.

மரணத்தைத் தழுவியவர்கள் ஆத்மாக்களோ, உடல்களை முற்றாக உதறிவிட்டு இறைவனடியில் ஓய்ந்திருக்க, மரண தேசத்தின் எல்லைக் கோட்டை தொட்டுத் திரும்பியவர்கள், தம் அங்கங்களைப் பகுதியாகவும் முழுமையாகவும் இழந்தவர்களாய் அன்றாட ஜீவனோபாயத்திற்காக மாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படங்களில் கூட காட்டக்கூடாதென்று தணிக்கை செய்யப்படும் காட்சிகளை விடப் பன்மடங்கு கோரமான காட்சிகளை கண்ணுற்றதால் கலக்கமுற்று மனதால் மரணித்து, நடைப்பிணங்களாக நடமாடும் நம்மவர்கள் பலர்.
சோகங்களே சொத்தாகிப் போனாலும், சோரம் போகாத இனமாக சேர்ந்தெழுவோம். மனிதர்கள் மரணித்தாலும் மனிதம் மரணிக்காத தேசமிதுவென்று மற்றவர் வியக்கும்படி மாற்றங்களை உருவாக்குவோம்.

Tags: அறைகூவல்பாரியார்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்ரவிராஜ்
News Team

News Team

Recent Posts

  • நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்
  • (no title)
  • தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை
  • உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்; 1.2 மில்லியன் பரிசுகள்
  • தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist