மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணிதாயார்; இருவாரும் சுகாதார உத்தியோகத்தர் ஒருர் உட்பட 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று திங்கட்கிழமை (17) மாலை 6 மணிவரையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சின்ன ஊறணி, திருச்செந்தூர், கல்லடி வேலூர் கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு , ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளின்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி தொடக்கம் திங்கட்கிழமை மாலை 6 மணிவரை இரு கர்ப்பணிதாய்மார்கள் ஒரு சுகாதார வைத்திய அதிகாரி உட்பட 66 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்படடதையடுத்து
மாவட்டத்தில் 1502 பேராக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 3 வது கொரோனா அலையில் 10 பேர் மரணமடைந்து ள்ளதாகவும் மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கொரோனா தொற்று றோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகவும்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சின்னஊறணி கிராமசேவகர் பிரிவு, திருச்சொந்தூர் கிராமசேவகர் பிரிவு, கல்லடி வேலுர்ர்; கிராமசேவகர் பிரிவு ஆகிய 3 கிராமசேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தி முடக்க தேசிய கொரோனா தடுப்பு பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்