யாழ்.ஆணைக்கோட்டை – முள்ளி பகுதியில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று பிற்பகல் இந்த இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சம்பவத்தில் முள்ளி பகுதியை சேர்ந்த 23 வயது, 24 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா வாள் கோடாரி என்பன கைப்பற்றன என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.