யாழ்.சுன்னாகம் – தொட்டியாலடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரழிவித்துள்ளனர். தாக்குதல் இடம்பெற்ற வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டின் உரிமையாளருடைய பெயரை
கூறி அழைத்ததாகவும் இதன்போது குறுக்கே வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய பின்னர் வீட்டின் உரிமையாளர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது காயமடைந்த நிலையில் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.