திருகோணமலை, கிண்ணியா பகுதியில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கியுள்ளனர். இதில் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், இதுவரை சரியான எண்ணிக்கை உறுதியாகவில்லை.
குறிஞ்சாக்கேணி பகுதியில் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.
பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.
நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. மீட்கப்படுபவர்கள் உடனுக்குடன் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.