Friday, August 12, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home Diplomat

தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

santhanes by santhanes
February 27, 2021
in Diplomat, முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து
0
SHARES
69
VIEWS
FacebookWhatsappTwitterEmail

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைகள்  கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களுக்கு இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை.

ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக ஐ.நா. சபை இலங்கை விடயத்தைக் கையாண்டு வருகிறது. எனினும் இலங்கை அரசாங்கம், தம்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுதலித்து வருகிறது.

கடந்த ஆண்டு, இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற உடனேயே, இலங்கை அரசாங்கம் ஐ.நா.வுக்கு வழங்கிய உறுதிமொழிகளைக் கைவிட்டது.

அத்துடன், போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை அதிகாரப் பதவிகளுக்கு நியமிக்கிறது. பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக இலங்கையின் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே சில வீரர்களில் ஒருவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதனைவிட, ஒரு சாத்தியமான உள்நாட்டுச் செயன்முறை இருப்பதாக, ஐ.நா. சபையைத் தவறாக வழிநடத்தும் ஒரு வெளிப்படையான முயற்சியில் இலங்கை மற்றொரு விசாரணை ஆணையகத்தை அறிவித்துள்ளது.

சர்வதேச அழுத்தத்தைத் திசைதிருப்ப நிறுவப்பட்ட இந்த விசாரணை ஆணையகம், பலவீனமான ஆணைகள், சுதந்திரம் இல்லாமை, வளங்களின் பற்றாக்குறை, நடைமுறையற்ற நிலை, மோசமான ஒத்துழைப்பு ஆகியவற்றால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையகங்களின் நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியாகும்.

இதேவேளை, இந்தவாரம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. மனித உரிமைகள் சபையில்  உரையாற்றியிருந்தார். அவர் சர்வதேச போர்க் குற்றங்களை மறுத்தார். ஐ.நா.வின் தீர்மானங்களை நிராகரித்ததுடன் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை பிரசாரம் எனத் தெரிவித்து நிராகரித்தார்.

இந்நிலையில், நீதியைப் பின்தொடர்வதற்கான எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இருப்பதாக யாரும் நம்ப முடியாது.

அத்துடன், இப்போதும் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், நீதி கோரிய இலங்கை அதிகாரிகள்கூட ஆபத்தில் உள்ளனர். வழக்கறிஞர்கள் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா.சபையின் நடவடிக்கையை வலியுறுத்திய போராட்டக்காரர்கள் பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கடுமையான குற்றங்களுக்கான சர்வதேச பொறுப்புணர்வை முன்னெடுப்பதற்காகவும் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் பரிந்துரைகளை பேரவையின் உறுப்பு நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

உயர்ஸ்தானிகர் கூறுவது போல், சர்வதேச சமூகம் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடயத்தில் தோல்வியுற்றது போல், மீண்டும் ஏற்படக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 46ஆவது மாநாடுதமிழர்மனித உரிமைகள் கண்காணிப்பகம்
santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 நாட்கள் பூர்த்தி
  • இலங்கையை நோக்கி நகரும் சீன கப்பல்
  • கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்
  • மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்க மாட்டோம்: சிறிதரன்
  • இலங்கையின் பங்காளியாக செயற்பட தயார்: ஐரோப்பிய ஒன்றியம்
  • All
  • இலங்கை
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 நாட்கள் பூர்த்தி

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 நாட்கள் பூர்த்தி

August 12, 2022
இலங்கையை நோக்கி நகரும் சீன கப்பல்

இலங்கையை நோக்கி நகரும் சீன கப்பல்

August 12, 2022
கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்

கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்

August 12, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In