திருகோணமலை, கிண்ணியா- குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி, சிகிச்சைப் பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் அண்மையில் இடம்பெற்ற மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பால விபத்தில் பல மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சிறுமியின் உயிரிழப்பை தொடர்ந்து குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
குறிஞ்சாக்கேணியில் பழைய பாலத்திற்குப் பதிலாக களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது.