Saturday, July 2, 2022
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம்

santhanes by santhanes
November 20, 2021
in இலங்கை, பாராளுமன்றம், முக்கியச்செய்திகள்
Reading Time: 1min read
0 0
0
இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம்
0
SHARES
156
VIEWS
FacebookWhatsappTwitterEmail
8 / 100
Powered by Rank Math SEO

எமது அயல் நாடானா இந்தியாவுடனான நல்லுறவென்பது இலங்கைக்கு அத்தியாவசியம். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் அடித்தளமாகக்கூட இந்த விடயத்தைக் கருதலாம். என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

அணிசேராக் கொள்கை தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றது என்ற கருத்தை நல்லாட்சியின் வெளிவிவகார அமைச்சர் முன்வைத்திருந்தார். அந்த கருத்துடன் உடன்பட முடியாது. நாம் அனைத்து நட்பு நாடுகளுடனும் சிறந்த நட்புறவை பேணிவருகின்றோம். ஒரு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் மற்றைய நாட்டுடன் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடும் கொள்கையென்பது எமது வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிரான விடயமாகும்.

எமது அயல்நாடான இந்தியாவுடனான நல்லுறவென்பது எமக்கு அத்தியாவசியம். இலங்கையின் வெளிவிவகார் கொள்கையின் அடித்தளமாகக்கூட இதனை கருதலாம். இரு நாடுகள், இரு அரசுகளுக்கு இடையில் மட்டுமல்ல இரு நாடுகளின் மக்களுக்கிடையிலும் சிறந்த நல்லுறவு உள்ளது.
பௌத்த கலாச்சாரத்துடன் தொடர்புடைய குஷி நகர் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு, திறந்துவைக்கப்பட்டது. எமது நாட்டில் இருந்து 100 பிக்குகள் சென்ற விமானமே முதலில் தரையிறங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்திருந்தார். ஸ்கொட்லாந்தில் பாரத பிரதமரை சந்தித்தபோது அதற்காக நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டேன். இந்தியாவின் பிராந்தியங்களுடனும் நாம் கொடுக்கல், வாங்கல்களிலும் ஈடுபட்டுவருகின்றோம்.

சீனாவும் எமக்கு அதிக உதவிகளை வழங்கும் நாடு. இலங்கையின் ஏற்றுமதியில் பெரும்பங்கு மேற்குலகமே செல்கின்றது. ஆபிரிக்க நாடுகளுடனான உறவை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் நாம் முன்னெடுத்தபோது சிரித்தனர். புதிய நாடுகளுடனான தொடர்புகள் அவசியம். ஆக ஒரு வட்டாரத்துக்குள் மட்டும் இருக்காது, அனைத்து நட்பு நாடுகளுடன் நாம் சிறந்த நல்லுறவை பேணுவோம்.

அதேவேளை, ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டகுழு எமது நாட்டுக்கு வந்தது. என்னையும் சந்தித்து கலந்துரையாடினர்.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளன். பேச்சுகள் தொடர்கின்றன. எனவே, ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்தில் சிக்கல் வராது என்றே நம்புகின்றேன்.”- என்றார்.

santhanes

santhanes

Currently Playing

Recent Posts

  • இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு
  • தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்
  • காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்
  • மெத்தியுஸ் அணியில் இருந்து நீக்கம்
  • 4 மாதங்களுக்கான எரிவாயு கொள்வனவு
  • All
  • இலங்கை
இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு

இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்: 5 வயது மகள் உயிரிழப்பு

July 1, 2022
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

July 1, 2022
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்: நிமல்

July 1, 2022

Tamil Press24

Tamil Press24

online news

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
AllEscort