இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வு இன்று காலை யாழ். இந்திய துணைத் தூதுவராலயத்தில் இடம்பெற்றது.
யாழ் இந்திய துணைத்தூதுவராலய பிரதி துணைத்தூதுவர் ராம் மகேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றலுடன் பிரதமரின் உரையும் வாசித்தளிக்கப்பட்டது. மேலும் தேச பக்திப் பாடல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.